அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, மீண்டும் டிசம்பர் 3 இல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் "கூட்டம் நன்றாக இருந்தது, மீண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். 

விவசாயிகள் சார்பாக பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் விவசாயிகள் தலைவர்கள் பேச்சுவார்த்தை அனைவருடனும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினர், எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறினார்